×

15 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தைகளை கூறி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: எம்எல்ஏ பாராட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கனிமொழி தம்பதியரின் மகள் ரிதன்யா (8). இவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும்  கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து 14 நிமிடம் 44 விநாடிகளில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி நேற்றுமுன்தினம் மாணவி ரிதன்யா சாதனை படைத்தார்.

இவரது சாதனை,
1. வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்’,
2. இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்,
3. நோபல் உலக சாதனை’ மற்றும்
4.அசிஸ்ட் உலக சாதனை’ ஆகிய புத்தகங்களில் இடம் பிடித்தன. இந்த சாதனையை படைத்த மாணவி ரிதன்யாவை, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் அழைத்து பாராட்டினார்.

The post 15 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தைகளை கூறி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: எம்எல்ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Rithanya ,Kanimozhi ,Prabhakaran ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...